என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் பேருந்து மோதி விவசாயி பலி
- தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி நேற்று பழனிசாமி உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்துள்ள கெட்ரபட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது52).
விவசாயியான இவர் பனந்தோப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பழனிசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பழனிசாமி உயிரிழந்தார்.
இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






