என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
உத்தமபாளையம் அருகே நோய் கொடுமையால் விவசாயி தற்கொலை
- கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
உத்தமபாளையம் அருகே பண்ணைபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது42). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கிழவிகுளத்தில் ஏல விவசாயம் பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






