என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை
- குடிப்பழக்கத்தினால் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
- மனவிரக்தியில் முனிராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒன்னால்வாடி பகுதியைச் சேர்ந்த முனிராஜ் (வயது 54) .விவசாயி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் அதிக அளவில் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 7-ம் தேதி வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மனவேதனையில் முனிராஜ் விஷம் குடித்துள்ளார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






