என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நிலத்தகராறில் தாய்-மகனை வெட்டிக்கொன்ற விவசாயி கைது
- ராஜமாணிக்கத்திற்கும் அருகே வசிக்கும் மற்றொரு விவசாயியான பெரியசாமி (50) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- பெரியசாமி இன்று அதிகாலை போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணாபுரம்,
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஒன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 55). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தின் அருகில் மற்றொரு விவசாய நிலம் உள்ளது.
அருகருகே உள்ள விவசாய நிலங்களில் வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திற்கும் அருகே வசிக்கும் மற்றொரு விவசாயியான பெரியசாமி (50) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று ராஜமாணிக்கம் தனது தாய் பழனியம்மாளுடன் விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த பெரியசாமி வரப்பு தொடர்பாக ராஜமாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜமாணிக்கத்தை வெட்டினார். அவருடைய தாயார் பழனியம்மாள் தடுக்க முயன்றபோது அவரையும் சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பெரியசாமியால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ராஜமாணிக்கமும், அவரது தாயும் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர்் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே ராஜமாணிக்கம், பழனியம்மாள் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய பெரியசாமியை பிடிக்க தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் பெரியசாமி இன்று அதிகாலை போலீசில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்