என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் முள் வேலிக்குள் சிக்கி தவிக்கும் குடும்பங்கள்
    X

    வழிச்சாலையில் முள் வேலிகள் போடப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    தருமபுரியில் முள் வேலிக்குள் சிக்கி தவிக்கும் குடும்பங்கள்

    • பாலக்கோடு அருகே முள் வேலிக்குள் சிக்கி தவிக்கும் குடும்பங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கரகதஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோவிலூரான் கொட்டாய் சேர்ந்தவர்கள் சங்கர்(40), ஆனந்தன் (42) ஆகிய இருவரது குடும்பங்களே முள் வேலிக்குள் சிக்கி கொண்டு 4 நாட்களாக வீடுகளிலியே சிக்கி தவிப்பதாக தெரிவிக்கின்றனர்.

    தங்களது உறவினரான மாதம்மாள் (65) என்பவரது குடும்பத்தினரே, கால காலமாக பயன்படுத்தி வந்த சாலையை முள் வேலி கொண்டு அடைத்து விட்டதால், இந்த நிைலமை ஏற்பட்டிருப்பதாகவும், திடீரென முள் வேலி அமைத்துவிட்டதால், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை, குடிக்க தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை, கழிவறைக்கு கூட சென்று வர முடியாமல் தவித்து வருவ தாகவும் கூறுகின்றனர்.

    இது குறித்து பாதிக்கபட்டவர்கள் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறுவதை தவிர வேறு வழியில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×