என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போலி வெள்ளி பொருட்களை விற்க முயன்ற 2 பேர் கைது
Byமாலை மலர்6 Dec 2022 9:35 AM GMT
- பிரகாஷ் (வயது 26). இவர் இரும்பாலை பகுதியில் வெள்ளி மற்றும் தங்க நகைகளை விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
- போலி வெள்ளி பொருட்களை விற்க முற்பட்டவர் கைது
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி அடுத்த சித்தன் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 26). இவர் இரும்பாலை பகுதியில் வெள்ளி மற்றும் தங்க நகைகளை விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று காலை இவரது கடைக்கு வந்த 2 வாலிபர்கள் போலி வெள்ளி பொருட்களை விற்க முற்பட்டனர். இதை கண்டுபிடித்த பிரகாஷ் இது குறித்து உடனடியாக இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக 2 வாலிபர்களையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் காரிப்பட்டி அருகே உள்ள எஸ்.என். மங்கலம் பச்சியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த நவீன்ராஜ் ( 30), அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் ( 31) என்பது தெரிய வந்தது.
2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X