search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி டாக்டர் கைது
    X

    போலி டாக்டர் கைது

    • அதே பகுதியில் மருத்துவம் படிக்காமல் கிளினீக் வைத்து மருத்துவ பார்த்தது தெரியவந்தது.
    • போலீசார் போலி டாக்டரான சிவராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மருத்துவ துறை இணை இயக்குனர் சண்முகம் என்பவருக்கு முத்தள்ளியில் டாக்டருக்கு படிக்காமல் ஒருவர் மருத்துவம் பார்ப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தார்.

    அப்போது அங்கு அதேபகுதியைச் சேர்ந்த சிவராஜன் (வயது32) என்பவர் அதே பகுதியில் மருத்துவம் படிக்காமல் கிளினீக் வைத்து மருத்துவ பார்த்தது தெரியவந்தது.

    மேலும், அவர் வேப்பபன்பள்ளி சாலை, குந்தாரப்பள்ளி சந்திப்பு சாலை ஆகிய பகுதிகளிலும் கிளினீக் வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. உடனே அவரை பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் போலி டாக்டரான சிவராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×