என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளிக்கப்பட்டது.
58-ம் கால்வாய் பகுதியில் தொழிற்சாலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
- இந்தப் பகுதியில் உள்ள கல்குவாரி,கிரஷர் மற்றும் பட்டாசு தொழிற்சா லை அனுமதியை ரத்து செய்து,தொட்டி பாலத்தை பாதுகாக்க உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- 58 கிராம கால்வாய் தொட்டி பாலம் தூண்களில் விரிசல் ஏற்படுகிறது.பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.
குள்ளனம்பட்டி:
அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் திட்டம் பெரும் முயற்சியின் காரணமாக திட்டம் நிறைவடைந்தது.இதனால் கேரளாவில் நல்ல மழை பெய்யும் போது 58 கிராம கால்வாயில் தண்ணீர் வந்து உசிலம்பட்டி மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.இதனால் அனைத்து இடங்களிலும் நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீண்ட தொட்டி பாலம் அமைத்து வைகை அணையில் 27 கி.மீ கால்வாய் அமைக்கப்பட்டு உத்தப்ப நாயக்கனூரில் 2 பகுதியாக பிரிந்து விவசாயத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இந்த தொட்டிபாலம் அருகே கல்குவாரி,கிரசர் அமைத்து வெடிவைத்து கல் எடுத்து வருகின்றனர்.அதன் அருகிலேயே பட்டாசு தொழிற்சாலை வைத்து நடத்தி வருகின்றனர்.இதனால் 58 கிராம கால்வாய் தொட்டி பாலம் தூண்களில் விரிசல் ஏற்படுகிறது.பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.
ஆகவே இந்தப் பகுதியில் உள்ள கல்குவாரி,கிரஷர் மற்றும் பட்டாசு தொழிற்சா லை அனுமதியை ரத்து செய்து,தொட்டி பாலத்தை பாதுகாக்க உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது மாநில செயலாளர் பாஸ்கர பாண்டியன்,உசிலம்பட்டி மாவட்ட கவுன்சிலர் வக்கீல் ரெட்காசி, விவசாய அணி தலைவர் எவரெஸ்ட் பாலுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.






