என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்பவானி வாய்க்கால் கரையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    X

    கீழ்பவானி வாய்க்கால் கரையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    • கீழ்பவானி வாய்க்கால் கரையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்
    • பொதுப்பணித்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட பொது ப்பணித்துறை கவுந்தப்பாடி பாசன பிரிவு உதவி செய ற்பொறியாளர் ரமேஷ் திங்களூர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிரு ப்பதாவது:- பொதுப்பணி த்துறை நீர்வளத்துறை பாச னப் பிரிவு கட்டுப்பா ட்டில் உள்ள கீழ்பவானி கால்வா யில் 40-வது மைல் அருகே கசிவுநீர் அடிமட்ட பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தின் இடதுபுற மண் கரையில் இருந்த துவாரம், கான்கிரீட் கலவை மூலம் கால்வாயின் இரு பக்கங்களிலும், கால்வாயின் உட்புறமும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு மர்ம நபர்கள் கடப்பாரையால், ஒரு அடி ஆழத்துக்கு துளை போட்டு கான்கிரீட் போடப்பட்ட பகுதியை சேதப்படுத்தி உள்ளனர். இவ்வாறு போட ப்பட்ட துளையின் வழியாக தண்ணீர் உட்பகுந்து கரை யை பலவீனப்படுத்தி கரை உடையும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு கரை உடை ந்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரையில் போட ப்பட்ட கான்கிரீட் தளத்தை உடைத்து, கரையை பலவீன ப்படுத்தும் செயலில் ஈடு பட்ட நபர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வே ண்டும்.

    கான்கிரீட் தளம் சேதப்ப டுத்திய இடத்தில் மீண்டும் மர்ம நபர்கள் கான்கிரீட்டை உடைத்து பெரிய அளவில் சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. கான்கிரீட் உடைந்த இடத்தில் மீண்டும் கான்கிரீட் போட்டு துவாரத்தை சரி செய்யும் வரை இரவு மற்றும் பகல் நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வே ண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×