search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    • கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த அரசு பள்ளியானது சத்தியமங்கலம்- அத்தாணி முக்கிய சாலையின் ஓரமாக அமைந்துள்ளது. இதனால் காலை, மாலை பஸ்கள், லாரி, கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட போக்குவரத்து இந்த சாலை வழியாக அதிகம் காணப்படுகிறது.

    அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் எந்நேரமும் வாகனங்கள் வேகமாக செல்வதால் பள்ளி நாட்களில் மாணவ, மாணவிகள் தினமும் அச்ச த்துடன் பள்ளி சென்று வரும் சூழலே உள்ளது.

    கள்ளிப்பட்டி அருகே பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் மது அருந்தி விட்டு அந்த சாலை வழியாக வாகன ஓட்டிகள் பயணிப்பதையும் காண முடிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி நோக்கி மது அருந்தி விட்டு லாரியை ஓட்டி வந்த டிரைவர் கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவ, மாணவிகள் கூட்டத்தில் லாரியை விட்டதில் 2 மாணவிகளுக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோன்று இந்த மாதத்தில் மட்டும் அத்தாணி- சத்தியமங்கலம் சாலையில் கள்ளிப்பட்டி பகுதியில் சாலை விபத்தில் ஒரு உயிர்சேதம், ஒருவருக்கு கால் துண்டானது மற்றும் 2 மாணவிகளுக்கு கை, கால் முறிவும் ஏற்பட்டு ள்ளது.

    இதனால் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்தில் பள்ளி செல்வதால் கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாவட்ட நிர்வாகம் வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இனி வரும் காலங்களில் இது போன்ற சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×