என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
    X

    தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    • தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்
    • இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி,

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சின்னாரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24). இவர் கல்லூரி பஸ் டிரைவராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு பிரசாந்த் கோபி செட்டி பாளையம் அடுத்த மேவாணி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் ஒரு வளைவில் திரும்பும் போது அந்த பகுதியில் இருந்த தடுப்பு சுவர் மீது எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பிரசாந்த் படுகாயம் அடை ந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×