search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நம்பியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிலதரகர் பலி
    X

    நம்பியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிலதரகர் பலி

    • நம்பியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிலதரகர் பலியானார்
    • சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

    நம்பியூர்,

    ஈரோடு மாவட்டம், நம்பியூர், குருமந்தூர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (70). நிலதரகர். இவரது மனைவி மாசிலாமணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தெய்வ சிகாமணி காளி யம்மன் நகர், குருமந்தூர் மேடு பகுதி யில் காலைக்கடன் கழிப்ப தற்காக ரோட்டில் இடது புறம் நின்று கொண்டி ரு ந்தார். அப்போது அந்த வழி யாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக தெய்வசி காமணி மீது மோதியது.

    இதில் அவருக்கு தலை யில் பலத்த காயம் மற்றும் இடது தொடையில் வலது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இற ந்தார். விபத்தை ஏற்படு த்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து நம்பியூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. விபத்து குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தின் அருகே பொரு த்தப்பட்டி ருக்கும் சிசி.டி.வி. கேமரா காட்சி களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×