என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலித் தொழிலாளி சாவு
- வாய்க்காலில் மனோகரன் விழுந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு, அக். 21-
ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் செண்பகபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம நாயக்கர் மனைவி சின்ன ம்மாள் (வயது 70). இவரது மகன் மனோகரன் (45).
இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலை யில் சம்பவத்தன்று மனோ கரன் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல இடங்க ளில் தேடி பார்த்தும் மனோ கரன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பவர் ஆபீஸ்-ஒப்பலவடனூர் ரோட்டில் ஒரு தோட்டத்தின் பக்கத்தில் உள்ள கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் மனோகரன் விழுந்து கிடப்பதாக சின்னம்மாளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சின்ன ம்மாள் மற்றும் உறவினர்கள் மனோகரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சக்தி யமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதிக்க மருத்துவர்கள் மனோகரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து சின்னம்மாள் சத்தியமங்க லம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.






