search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உள் தணிக்கை குழுவினர் ஆய்வு
    X

    உள் தணிக்கை குழுவினர் ஆய்வு

    • பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை பணிகளை கள ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, ஈரோடு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோ ட்டம் மூலமாக செயல்படுத்தப்படும் பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    கோவை வட்டம், தேசிய நெடுஞ்சா லைத்து றை அலகு கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான இந்த உள் தணிக்கைக்குழு கடந்த வாரம் முதல் ஆய்வு பணி கள் மேற்கொண்டுள்ளது.

    இக்குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் செயல்படுத்தி வந்த ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை பணிகளை கள ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின் போது ஈரோடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட ப்பொறியாளர் மாதே ஸ்வரன், உதவிக்கோட்டப் பொறியாளர் சரவணன், தரக்கட்டுப்பாடு உதவிக்கோட்டப் பொறியாளர் கண்ணன்,

    பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை உதவிக்கோட்ட ப்பொறியாளர் ராமுவேல், ஈரோடு கட்டுமானம் பராமரிப்பு உதவிப்பொறியாளர் சுரேஷ் மற்றும் தரக்கட்டுப்பாடு உதவிப்பொறியாளர் ஞானசேகரன்,

    கோவை தேசிய நெடுஞ்சாலை உதவி ப்பொறியாளர் கவுதம் மற்றும் சத்தியபிரபா, தேசியநெடுஞ்சாலை உதவிப்பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×