search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரட்டை வாய்க்காலில் பிணமாக மிதந்த பெண்
    X

    இரட்டை வாய்க்காலில் பிணமாக மிதந்த பெண்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்பிணமாக மிதந்தார்.
    • வாய்க்காலில் குளித்த போது தவறிவிழுந்து இறந்தாரா?

    கொடுமுடி,

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்துள்ள பாசூர் இரட்டைவாய்க்காலில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்பிணமாக மிதந்தார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மலையம் பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக மிதந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

    அப்போது அவர் சுடிதார் அணிந்து காணப்பட்டார். மேலும் அவர் யார்? என்பது உள்ளிட்ட எந்த விபரங்களும் தெரியவில்லை.

    வாய்க்காலில் குளித்த போது தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசிசென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதலில் பிணமாக கிடந்த பெண் யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×