என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
இரட்டை வாய்க்காலில் பிணமாக மிதந்த பெண்
By
மாலை மலர்27 March 2023 7:49 AM GMT

- 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்பிணமாக மிதந்தார்.
- வாய்க்காலில் குளித்த போது தவறிவிழுந்து இறந்தாரா?
கொடுமுடி,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்துள்ள பாசூர் இரட்டைவாய்க்காலில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்பிணமாக மிதந்தார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மலையம் பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக மிதந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
அப்போது அவர் சுடிதார் அணிந்து காணப்பட்டார். மேலும் அவர் யார்? என்பது உள்ளிட்ட எந்த விபரங்களும் தெரியவில்லை.
வாய்க்காலில் குளித்த போது தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசிசென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதலில் பிணமாக கிடந்த பெண் யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
