search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரிய புலியூர் பகுதிக்கு சென்று வர பாலம் அமைத்து தர வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
    X

    பெரிய புலியூர் பகுதிக்கு சென்று வர பாலம் அமைத்து தர வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

    • பெரிய புலியூர் பகுதிக்கு சென்று வர பாலம் அமைத்து தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்
    • இந்த பகுதியில் விவசாய நிலங்கள், ஏராளமான குடி யிருப்புகள், விசைத்தறி க்கூடங்கள் உள்ளன.

    ஈரோடு,

    ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொது மக்கள் தங்களுடைய பிரச்ச னைகள் குறித்து கலெக்ட ரிடம் மனுக்களை வழங்கினர். அப்போது பெரிய புலியூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அ வர்கள் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் மாருதி நகர், அம்மன் நகர் உட்பட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் செல்ல பள்ளம் ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பகுதியில் விவசாய நிலங்கள், ஏராளமான குடி யிருப்புகள், விசைத்தறி க்கூடங்கள் உள்ளன. எனவே இப்பகுதி மக்களுக்கு பாலம் அமைத்துக் கொடு த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    Next Story
    ×