search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருமனை கிறிஸ்தவ இயக்க விழாவில் பங்கேற்க வரும் திருமாவளவனுக்கு உற்சாக வரவேற்பு
    X

    அல்காலித்

    அருமனை கிறிஸ்தவ இயக்க விழாவில் பங்கேற்க வரும் திருமாவளவனுக்கு உற்சாக வரவேற்பு

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் அல்காலித் அறிக்கை

    கன்னியாகுமரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குமரி மாவட்டம் அரு மனை கிறிஸ்தவ இயக்கம் நடத்தும் 25-வது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சி இன்று (வெள்ளிக் கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து சமூக நல்லிணக்க மாநாடு நடை பெற உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய்வசந்த், செல்லக்குமார், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஹெலன் டேவிட்சன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் துரை வைகோ, எஸ்.ஆர்.எம். கல்வி குழும தலை வர் ரவி பச்சமுத்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, மாநில தலைவர் முபாரக், பெங்களூர் டாக்டர் ராபர்ட் கிறிஸ்டோபர், நடிகரும் டைரக்டருமான தியாகராஜன், நடிகர் பிரசாந்த், இந்திய குடியரசு கட்சி தமிழக தலைவர் சூசை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென் மாவட்ட முக்கிய பிரமுகர்கள், இந்நாள், முன்னாள் பேராயர்கள் பங்கேற்கிறார்கள்.

    மாநாட்டில் பங்கேற்ப தற்காக சென்னையில் இருந்து திருமாவளவன் திருவனந்தபுரம் வருகிறார்.அங்கிருந்து இன்று மாலை கார் மூலம் அருமனை வருகிறார். அவருக்கு கட்சி யின் சார்பில் களியக்கா விளையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படு கிறது. இந்த நிகழ்ச்சியில் மதசார்பற்ற சக்திகள், ஜனநாயக சக்திகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×