என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோடை கால வெப்பத்தை தணிக்க நீரா  விற்பனையை  ஊக்கப்படுத்த வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
    X

    கோடை கால வெப்பத்தை தணிக்க நீரா விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து வகை பொருட்களும் மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டு வருகிறது.
    • அரசுத்துறைகள் சார்பில் நீரா விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் என்றனர்.

    உடுமலை :

    உடுமலை, குடிமங்கலம் பகுதியில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் அனைத்து வகை பொருட்களும் மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டு வருகிறது.

    அதன்படி இளநீர், தேங்காய் எண்ணெய், தென்னங்கருப்பட்டி ஆகிய பொருட்கள் முன்பு அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு மாற்றங்களால் இப்பொருட்கள் பயன்பாடு குறைந்தது. மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் தென்னையில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்களுக்காக ஆய்வுகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு வழிகாட்டுதலும் வழங்கி வருகிறது.

    அதில் தென்னம்பாளையில் இருந்து பெறப்படும் நீரா பானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இவ்வகை பானம் உற்பத்தி துவங்கி தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகிறது.உடலுக்கு பல வித நன்மைகளை அளிக்கும் இந்த பானத்தை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்தது. தனிநபராக இல்லாமல் தென்னை வளர்ச்சி வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய அரசு வழிகாட்டுதல் வழங்கியது.

    அதன்படி உடுமலை பகுதியில் 2 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் சார்பில் நீரா பானம் விற்பனை மையம் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டது.

    மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் விற்பனை சரிவு உள்ளிட்ட காரணங்களால் நீரா உற்பத்தியை மேற்கொள்வதை கைவிடும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.இந்நிலையில் கோடை காலம் துவங்கி வெயில் கொளுத்தி வரும் நிலையில் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பானங்களை தவிர்த்து இயற்கை பானங்களுக்கு மக்கள் கைகொடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- தென்னம்பாளையில் இருந்து பெறப்படும் நீரா பானம் பல்வேறு சத்துகளை உள்ளடக்கியது. மரத்தில் இருந்து 5 டிகிரி செல்சியஸ் குளுமையில் வடித்து எடுக்கப்படும் பானத்தில் எந்த கலப்படமும் செய்யப்படுவதில்லை.காலை நேரம் இப்பானத்தை அருந்தலாம். தொடர்ந்து இப்பானத்தை அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் எலும்புக்கும் வலு கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளும் பானத்தை அருந்தலாம்.இத்தகைய இயற்கை பானங்களுக்கு மக்கள் ஆதரவு அளித்தால் விவசாயமும் மேம்படும். உடல் நலனும் பாதுகாக்கப்படும்.

    தேங்காய், கொப்பரை விலை சரிவால் பல ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நீரா உற்பத்தி, விற்பனை செய்வதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். மக்களும் பயன்பெறுவார்கள்.

    இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசுத்துறைகள் சார்பில் நீரா விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் என்றனர்.

    Next Story
    ×