என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
    X

    தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

    • மனம் உடைந்த சிலம்பரசன் தற்கொலை செய்து கொண்டார்
    • பெண் உட்பட உறவினர்கள் 3 பேர் கைது

    கிருஷ்ணகிரி,

    கிருஷணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள தேவர்மு க்குலம் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன்( (வயது36) இவர் சாப்பனிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உறவினர் செந்தில் அவரிடம் இருந்து கடனாக ரூ.15 ஆயிரம் பணத்தை சிலம்பரசன் வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் செந்தில், வாங்கிய பணத்துக்கு ரூ. 22 ஆயிரம் வட்டியுடன் கேட்டுள்ளார். அப்போது சிலம்பரசன் தன்னிடம் ரூ. 15 ஆயிரம் மட்டும் தான் உள்ளதாக சொல்லி கொடுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிலம்பரசனை தகாத வார்தைதகளால் செந்தில் திட்டியதாக தெரிகிறது.

    இதில் மனம் உடைந்த சிலம்பரசன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்(35) சுப்பிரமணி(60) சாந்தா(40) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×