என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானை.
பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானை கூட்டங்களால் பீதி
- நேற்று இரவு கோம்பைபட்டி பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து 2 யானைகள் நீண்ட நேரம் சுற்றி திரிந்தது.
- அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வனத்துறையினரிடம் அளித்து யானைகளை விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார ப்பகுதியில் கோம்பைபட்டி, பாலாறு பொருந்தலாறு, ராமபட்டிணம்புதூர் உள்ளி ட்ட பகுதிகள் உள்ளன. இங்கு அதிக அளவு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இப்பகுதிகளில் அடிக்கடி யானைகள் முகாமிட்டு விளை நில ங்களை சேதப்படுத்துவதும், விவசாயிகளை தாக்குவது போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக 10 யானைகள் இப்பகுதியில் முகாமிட்டு இருந்த நிலையில் நேற்று இரவு கோம்பைபட்டி பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து 2 யானைகள் நீண்ட நேரம் சுற்றி திரிந்தது.
அதனை விரட்ட முடியாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இரவு நேரம் என்பதால் வெளியே வர முடியாமலும் வீட்டுக்குள் நிம்மதியாக தூங்க முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வனத்துறையினரிடம் அளித்து யானைகளை விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக கோடை காலங்களில் மட்டுமே யானைகள் இடம் பெயர்ந்து விவசாய நிலங்களுக்குள் படையெடுக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக மழைபெய்த நிலையிலும் யானைகள் இடம்பெயர்ந்து மிரட்டி வருவது விவசாயி களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.






