search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரியோடு அருகே பைக் மோதி மின் அலுவலர் பலி
    X

    கோப்பு படம்

    எரியோடு அருகே பைக் மோதி மின் அலுவலர் பலி

    • சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த பைக் மோதி மின் அலுவலர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எரியோடு:

    எரியோடு அருகே உள்ள அருப்பம்ப ட்டியை சேர்ந்த மகேந்திரன் (வயது 59). இவர் கோவிலூர் மின்வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

    திண்டுக்கல்-கரூர் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த பைக் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் எரியோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×