search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள்  மோதி முதியவர் சாவு
    X

    மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

    • அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காளியப்பன் மீது மோதியது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). விவசாயி.

    இவர் சம்பவத்தன்று பாலக்கோடு-பாப்பா–ரப்பட்டி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காளியப்பன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாய–மடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காளியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×