என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் காவடி சுமந்து பாத யாத்திரை சென்ற போது எடுத்தபடம்.
பழனி முருகன் கோவிலுக்கு எடப்பாடி பக்தர்கள் காவடி சுமந்து பாத யாத்திரை தொடங்கினர்
- முதல் பக்தர்கள் ஒவ்வொரு குழுக்களாக சேர்ந்து பழனி கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர்.
- எடப்பாடியில் இருந்து சுமார் 2 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் காவடி தூக்கி பாதயாத்திரையாக நடந்து சென்று பழனி மலை ஏறி முருகனை தரிசிக்க உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டார மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பழனி மலைக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன்படி தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று ( 5-ந்தேதி) முதல் பக்தர்கள் ஒவ்வொரு குழுக்களாக சேர்ந்து பழனி கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர்.
வருகிற 14-ந்தேதி வரை காவடி தூக்கி எடப்பாடியில் இருந்து முக்கிய வீதிகள் நடந்து சென்று பழனி முருகனை தரிசிக்க உள்ளனர்.
எடப்பாடியில் இருந்து சுமார் 2 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் காவடி தூக்கி பாதயாத்திரையாக நடந்து சென்று பழனி மலை ஏறி முருகனை தரிசிக்க உள்ளனர்.
எடப்பாடி நகரத்தில் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்லும்போது அந்தந்த பகுதிகளில் உள்ள பெண்கள் அமைத்து காய்கறிகள், பழங்கள், பல்வேறு வகை மாலைகள், கடலை, சர்க்கரை, மாவு உள்ளிட்ட வகைகளை படைத்து பக்தர்களுக்கு வழங்குவார்கள்.
கணபதி கவுண்டர் என்பவரிடம், முதியவர் வேடத்தில் முருகன் வந்து ஆதி காவடியை கொடுத்து பழனி மலைக்கு வழிகாட்டி சென்றதாகவும் இவ் காவடிதான் எடப்பாடியில் இருந்து பழனி மலைக்கு எடுத்துச் சென்ற முதல் காவடி என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தின் போது காவடி தாராபுரம் அமராந்தி மானூர் பாலாற்றில் சிறப்பு பூஜை செய்து பழனி மலையில் ஆதி பரம்பரை காவடி 9-ந்தேதி மலை ஏறுகிறது.






