search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் நாளை பொருளாதார மேம்பாட்டு கடன் சிறப்பு முகாம்
    X

    கோப்பு படம்.

    தேனி மாவட்டத்தில் நாளை பொருளாதார மேம்பாட்டு கடன் சிறப்பு முகாம்

    • நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • ஆதார் அட்டை, ஜாதிச்சான்றிதழ், வருமானச்சான்று நகல், தொழில்திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்பட்டோர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள் சார்பில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினர், சிறுபான்மை சமூகத்தினருக்கு வங்கி கடன் வழங்க நாளை (28-ந் தேதி) 7 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் பிற்பட்டோர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகங்கள் சார்பில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மை சமூகத்தினரின் பொருளாதார மேம்பாட்டுக்கு தனி நபர் கடன், குழுகடன், கறவை மாட்டு கடன், சிறு குறு விவசாயிகளுக்கு நீர் பாசன கடன், கைவினைஞர்களுக்கு தொழில்கடன், கல்விக்கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன.

    இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க தேனி அல்லிநகரம், போடி ஆகிய இடங்களில் செயல்படும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கி, ஆண்டிபட்டி, ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    கடன் உதவி பெற விரும்பும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு தங்களது ஆதார் அட்டை, ஜாதிச்சான்றிதழ், வருமானச்சான்று நகல், தொழில்திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

    ரூ.25 ஆயிரத்துக்கு உள்பட்டு கடன் பெறுவதற்கு கூட்டுறவு சங்க உறுப்பினர் ஒருவரும், ரூ.50 ஆயிரத்துக்கு உள்பட்டு கடன் பெறுவதற்கு கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 2 பேரும் பிணை கையொப்பமிட வேண்டும். ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெறுவதற்கு கடன் தொகைக்கு இணையாக இரு மடங்கு சொத்து அடமானம் சமர்ப்பிக்க வேண்டும்.


    கல்விக்கடன் பெறுவதற்கு கல்வி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி உண்மைச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×