என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமைத்தொகைக்கு இ-ேசவை மையங்களில் கட்டணம் வசூலிக்க கூடாது
    X

    கோப்பு படம்.

    மகளிர் உரிமைத்தொகைக்கு இ-ேசவை மையங்களில் கட்டணம் வசூலிக்க கூடாது

    • 19ந் தேதி (இன்று) முதல் செயல்படும். பொதுமக்கள் நேரடியா கவோ, தொலைபேசி மூலமாகவோ இந்த மையங்களை தொடர்பு கொண்டு தங்களின் மனு குறித்த தகவல்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
    • மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும் ஆதார் அட்டை, ரேசன் அட்டை போன்ற ஆவணங்களுடன் அணுகி பயன்பெறலாம்.

    திண்டுக்கல்:

    மகளிர் உரிமைத்தொகை தொடர்பான குறைகளுக்கு தீர்வு காண திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 14 உதவி மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்ததாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 15ந் தேதி தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இது தொடர்பான பொது மக்களின் குறைகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டா ட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் 19ந் தேதி (இன்று) முதல் செயல்படும். பொதுமக்கள் நேரடியா கவோ, தொலைபேசி மூலமாகவோ இந்த மையங்களை தொடர்பு கொண்டு தங்களின் மனு குறித்த தகவல்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

    மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும் ஆதார் அட்டை, ரேசன் அட்டை போன்ற ஆவணங்களுடன் அணுகி பயன்பெறலாம். இத்திட்டத்தில் ஏற்கனவே மனு அளித்த பொதுமக்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சி யருக்கு இணையவழியில் இ-சேவை மையம் மூலம் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்த சந்தேகங்களுக்கு உதவி மைய எண்ணை ெதாடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×