search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்மண் வெட்டி கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
    X

    செம்மண் வெட்டி கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

    • டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்ததில் அர்ஜுனன் அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது.
    • அவரை மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கொட்ட பள்ளனூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது30). இவர் அதே பகுதியில் செம்மண்ணை வெட்டி டிப்பர் லாரியில் கடத்தி சென்றார். அப்போது அவர் திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் செல்லும்போது மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்ததில் அர்ஜுனன் அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே அவரை மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் அர்ஜூனன் மீது வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரியையும், கடத்தி சென்ற செம்மண்ணையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×