search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால்   கிருஷ்ணகிரி-கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு
    X

    மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் கிருஷ்ணகிரி-கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு

    • கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணை களுக்கு நீர்வரத்து சரிந்து வந்த நிலையில் பரவலாக பெய்த மழையால் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 709 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    மாண்டஸ் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் சாரல் மழை பெய்தது. பின்னர் சாரல் மழை பொழிவு குறைந்து பிற்பகலில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இந்நிலையில் மாலை 4.30 மணி அளவில் கிருஷ்ணகிரியில் மிதமான மழை பெய்தது.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர் காற்றுடன் சாரல் மழை பொழிவு காணப்பட்டது.

    இந்நிலையில் மாவட்டத் தில் உள்ள கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணை களுக்கு நீர்வரத்து சரிந்து வந்த நிலையில் பரவலாக பெய்த மழையால் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 576 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 794 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 39.28 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 740 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதே போல், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 832 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,083 கனஅடியாக அதிக ரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 709 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 50.50 அடியாக உள்ளது.

    Next Story
    ×