என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் கிருஷ்ணகிரி-கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு
- கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணை களுக்கு நீர்வரத்து சரிந்து வந்த நிலையில் பரவலாக பெய்த மழையால் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- அணையில் இருந்து வினாடிக்கு 709 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
மாண்டஸ் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் சாரல் மழை பெய்தது. பின்னர் சாரல் மழை பொழிவு குறைந்து பிற்பகலில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இந்நிலையில் மாலை 4.30 மணி அளவில் கிருஷ்ணகிரியில் மிதமான மழை பெய்தது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர் காற்றுடன் சாரல் மழை பொழிவு காணப்பட்டது.
இந்நிலையில் மாவட்டத் தில் உள்ள கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணை களுக்கு நீர்வரத்து சரிந்து வந்த நிலையில் பரவலாக பெய்த மழையால் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 576 கனஅடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 794 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 39.28 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 740 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதே போல், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 832 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,083 கனஅடியாக அதிக ரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 709 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 50.50 அடியாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்