search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை இல்லாததால் 138 அடியில் நீடிக்கும் பெரியாறு அணை நீர்மட்டம்
    X

    கோப்பு படம்

    மழை இல்லாததால் 138 அடியில் நீடிக்கும் பெரியாறு அணை நீர்மட்டம்

    • 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது
    • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.15 அடியாக உள்ளது. 511 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருேக கேரள எல்லைப்பகுதியில் அமை ந்துள்ள முல்லைப்பெரி யாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் மதுரை, தேனி மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக பருவமழை கைகொடுத்த தால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து இரு போக நெல்சாகுபடி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்றது. இந்த ஆண்டும் தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 387 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் 142 அடியை எட்டுவதில் தாமதம் ஆகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.15 அடியாக உள்ளது. 511 கன அடி நீர் வெளியேற்ற ப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 67.26 அடியாக உள்ளது. 650 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்தி ற்காக 1719 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.45 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 34 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    Next Story
    ×