என் மலர்
உள்ளூர் செய்திகள்

விலை கடும் சரிவால் மீன்களுக்கு உணவாக ஏரியில் கொட்டப்பட்ட முள்ளங்கி
- வியாபாரிகள் யாரும் வாங்க முன்வராத காரணத்தால் பல விவசாய நிலங்களில் உள்ள முள்ளங்கி பிடுங்காமல் விளை நிலங்களிலிலேயே விட்டுள்ளனர்.
- முள்ளங்கி கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் விலை பேசி, அவற்றை டிராக்கர் கொண்டு ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக்கி வருகிறார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக விலை கடுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளது. முள்ளங்கி விளைச்சல் நிலங்களுக்கு வியாபாரிகள் யாரும் வாங்க முன்வராத காரணத்தால் பல விவசாய நிலங்களில் உள்ள முள்ளங்கி பிடுங்காமல் விளை நிலங்களிலிலேயே விட்டுள்ளனர்.
இதனை அறிந்த பென்டரஹள்ளி கிராமத்தில் உள்ள திப்பனாங்குட்டை ஏரியின் மீன் பிடி குத்தகைதாரர், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளை அணுகி முள்ளங்கி கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் விலை பேசி, அவற்றை டிராக்கர் கொண்டு ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக்கி வருகிறார்.
விவசாய நிலத்தில் வீணாக போகும் முள்ளங்கிகளை வேறு வழியின்றி கிலோ ஒரு ரூபாய்க்கு விவசாயிகள் கொடுத்துவிடுகின்றனர்.
Next Story