search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதையில் விபரீதம்   மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
    X

    குடிபோதையில் விபரீதம் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

    • தினமும் வீட்டில் வந்து தகராறு செய்வாராம்.
    • கத்தியை எடுத்து வெங்கட்டம்மாவின் தலை மற்றும் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா தாசினிப்பள்ளி சேர்ந்தவர் அப்பாதுரை (வயது 60). இவரது மனைவி வெங்கட்டம்மா (55). குடிப்பழக்கம் உள்ள அப்பாதுரை தினமும் வீட்டில் வந்து தகராறு செய்வாராம்.

    இதேபோல நேற்றும் குடித்துவிட்டு வந்துள்ளார். அதனை வெங்கட்டம்மா கண்டித்துள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த அப்பாதுரை அருகே கிடந்த கத்தியை எடுத்து வெங்கட்டம்மாவின் தலை மற்றும் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.

    இதில் வெங்கட்டம்மா படுகாயம் அடைந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் வெங்கட்டம்மா புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பாதுரையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×