என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே குடிபோதையில் வாலிபர் மீது தாக்குதல்
    X

    கோப்பு படம்.

    திண்டுக்கல் அருகே குடிபோதையில் வாலிபர் மீது தாக்குதல்

    • மாங்கரை பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டு இருந்தார்.
    • அப்போது அவர்களுக்கு இடையே திடீர் தகராறு ஏற்பட்டது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த கதிரையன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ராஜ். இவரது மகன் ரகுபதி (வயது30). மாங்கரை பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நண்பர்களுடன் ரகுபதி மது குடித்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது அவர்களுக்கு இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. இதில் இரும்பு கம்பியால் தாக்கியதில் ரகுபதி படுகாயமடைந்தார். இதனை அடுத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×