என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையை கடக்க முயன்ற போது குடிபோதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
- அங்குள்ள சாலையை குடிபோதையில் கடக்க முயன்ற போது தவறி விழுந்தார்.
- சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் எம்.ஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது44). இவர் அங்குள்ள சாலையை குடிபோதையில் கடக்க முயன்ற போது தவறி விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






