search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சக்தி வித்யாலயா பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    பேரணியை பள்ளி தாளாளரும் முதல்வருமான ஜெயா சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    சக்தி வித்யாலயா பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளரும் முதல்வருமான ஜெயாசண்முகம் பேரணியை தொடங்கி வைத்தார்.
    • மாணவ, மாணவிகள் காமராஜ்நகர், மூன்றாம் மைல் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் உலக போதைபொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஜெயாசண்முகம் விழிப்புணர்வு பேரணிக்கு தலைமை தாங்கி மாணவ, மாணவிகளிடம் போதை பொருளால் வீடுகளில் அமைதி குலைந்து சந்தோஷம் குறைவதையும், பொருளாதார சீர்கேடு நடப்பதையும், உடல்நலம் பாதிக்கப்படுவதையும் விளக்கினார்.

    மேலும் போதை பொருளை பயன்படுத்தாத புதிய சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும் என்ற உறுதி கூறுவோம் என்று மாணவ, மாணவிகளை உறுதிமொழி கூறச்செய்தார்.

    அதன்பின் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் "போதை போதை என்று அலைபவர் குடும்பம் கெடும்" "போதையற்ற நல்வழிப்பாதையை உருவாக்குவோம்", "புகையிலை திண்ணாதே, புற்றுநோய்க்கு உள்ளாகாதே" போன்ற பல பதாகைகளை கையில் ஏந்தி மாணவ, மாணவிகள் காமராஜ்நகர், மூன்றாம் மைல் ஆகிய பகுதியிலுள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பேரணியில் ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி துணைமுதல்வர் ரூபிரத்னபாக்கியம் செய்திருந்தார்.

    Next Story
    ×