என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி மனநிலை பாதித்தவர் பலி
- சின்னமுனுசாமியை கடந்த 16-ந்தேதி முதல் காணவில்லை.
- அதே பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் அவர் பிணமாகி மிதந்தார்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் அருகேயுள்ள பலகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் (சின்னமுனுசாமி வயது 72).
இவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சின்னமுனுசாமியை கடந்த 16-ந்தேதி முதல் காணவில்லை. அவரை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் அவர் பிணமாகி மிதந்தார்.
ஏரியில் அவர் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பாகலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






