என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சின்னமனூர் அருகே வயல்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி
- சின்னமனூரில் முதன்முறையாக டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
- ஒரு ஏக்கருக்கு 10 நிமிடத்தில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.550 என்பது அனைத்து விவசாயிகளாலும் சாத்தியப்படாது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்ன மனூர், மார்க்கைய ன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெல், கரும்பு, பூக்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சின்ன மனூரில் முதன்முறையாக டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து விவசாயி தங்கவேலு தெரிவிக்கை யில், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடை பெற்றது. சின்னமனூர் வட்டாரத்தில் முதன்முறை யாக இந்த பணியை நான் மேற்கொண்டுள்ளேன். இதற்கு ரூ.550 கட்டணமாக வாங்கப்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு 10 நிமிடத்தில் டிரோன் மூலம் மருந்து தெளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.550 என்பது அனைத்து விவசாயிகளாலும் சாத்திய ப்படாது. இருந்தபோதும் பணி குறைகிறது என்பதால் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை மற்ற விவசாயிகள் பயன்படுத்து வார்களா என்பது விரைவில் தெரியும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்