search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி
    X

    இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி டிரைவர் பலி

    • நல்லம்பள்ளி அருகே இ இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதி டிலைவர் பலியானார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளி அடுத்த சிவாடியில் தனியார் பெட் ரோலிய நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தில் மேச்சேரி பள்ளப் பட்டியைச் சேர்ந்த அம்மாசியின் மகன் வெங்கடேசன் (43) என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மாலை பணியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் பாகலஅள்ளி அருகில் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதப மாக உயிரிழந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீஸ் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×