search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை அருகே விருந்துக்கு சென்ற டிரைவர்  திடீர் சாவு
    X

    பாலமுருகன்.

    வடமதுரை அருகே விருந்துக்கு சென்ற டிரைவர் திடீர் சாவு

    • வடமதுரை அருகே விருந்துக்கு சென்ற டிரைவர் திடீரென உயிரிழந்தார்.
    • இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வடமதுரை:

    வடமதுைர அருகே மொட்டனம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (48). இவர் நெடுஞ்சாலைத்துறையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு வீரமணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    நேற்று அய்யலூர் வண்டிகருப்பணசாமி கோவிலில் நடைபெற்ற கிடாவெட்டு விருந்துக்கு சென்றார். சாப்பிட்டுக்கொண்டிரு ந்தபோது திடீரென மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே பாலமுருகன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×