என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரில் குட்கா கடத்திய டிரைவர் கைது
    X

    காரில் குட்கா கடத்திய டிரைவர் கைது

    • குட்கா கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.
    • காரையும், ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் போலீசார் கக்கனூர் சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழீயாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் 238 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான்பராக், பான்மசாலா உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அதை கடத்தி வந்ததாக கிருஷ்ணகிரி அருகே உள்ள வராகசந்திரத்தைச் சேர்ந்த சின்னராஜ் (28) என்பவரை கைது செய்தனர்.

    விசாரணையில் அந்த குட்கா கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து காரையும், ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள குட்காவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×