search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டி அருகே குழாய் உடைப்பால் 1 மணி நேரம் வீணாகி சென்ற குடிநீர்
    X

    குழாய் உடைந்து சாலையில் வீணாக சென்ற குடிநீர்.

    செம்பட்டி அருகே குழாய் உடைப்பால் 1 மணி நேரம் வீணாகி சென்ற குடிநீர்

    • செம்பட்டி - மதுரை சாலையில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • மேட்டுப்பட்டியில் பணியின் போது குழாய் உடைப்பால் 1 மணி நேரம் குடிநீர் வீணாகி சென்றது.

    செம்பட்டி:

    செம்பட்டியில் இருந்து மதுரை செல்லும் மெயின் ரோட்டில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் பாலம் கட்டும் பணிகளுக்காக ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி பேரணையில் இருந்து சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் சாலை அகலப்படுத்தும் பணியின் போது மதுரை ரோடு மேட்டுப்பட்டியில் குடிநீர் குழாய் உடைந்து சேதப்படுத்தப்பட்டது.

    இதனால் குடிநீர் வீணாக சாலையில் சென்றது. அப்பகுதி முழுவதும் குளம் போல் தேங்கி காட்சியளித்தது. இது குறித்து அதிகாரிகளுக்கும் குடிநீர் ஆபரேட்டர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக குடிநீர் வீணாக சென்றது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது

    Next Story
    ×