search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள்-தென்காசி கோவிலில் சிறப்பு பூஜை
    X

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள்-தென்காசி கோவிலில் சிறப்பு பூஜை

    • காசிவிஸ்வநாதர் கோவிலில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பெயரில் அர்ச்சனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பெயரில் அர்ச்சனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொரு ளாளர் சுப்பிரமணியன், மாநில துணைச் செயலாளர் டேவிட் நாடார், துணை செயலாளர் திருமலைகுமார், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், உடையார், சாம்பவர்வடகரை கிளை தலைவர் மோகன், பரமசிவன், இசக்கிமுத்து நாடார், முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×