search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில், திராவிட மாடல் விளக்க மாநாடு
    X

    திருவாரூரில் மாநாடு நடந்தது.

    திருவாரூரில், திராவிட மாடல் விளக்க மாநாடு

    • சனாதனம் தான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது.
    • பதவியே திராவிட இயக்கத்தின் எதிரொலியால் கிடைத்திருக்கிற பதவி மறந்து விடாதீர்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் தெற்கு வீதியில் திராவிடர் கழகம் சார்பில் சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க மாநாடு நடைபெற்றது.

    மாநாட்டிற்கு திராவிட கழக தலைவர் வீரமணி தலைமை வகித்தார்.

    தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, காங்கிரஸ் கட்சியை கேட்டால் காங்கிரஸ் மாடல் என்று சொல்வார்கள். இடது சாரி கட்சி என்று கேட்டால் இடதுசாரி மாடல் என்று சொல்வார்கள்.

    ஆர்எஸ்எஸ், பா.ஜனதா கட்சியினர் திராவிட இயக்க அரசியலை தூக்கி எறிவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

    இந்த வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என நகர்மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என பேசினார்.

    இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் பேசியதாவது, தமிழ்நாட்டில் பா.ஜ.கவிற்கு2 தலைவ ர்கள். ஒன்று மோடியால் நியமிக்க ப்பட்ட அண்ணாமலை, இன்னொருவர் ரவி.

    அவரை ஆளுநர் என்று சொல்ல மாட்டேன்.

    ஆளுநர் பதவியோடு இருந்தால் ஆளுநர் என்று சொல்லலாம்.

    சனாதனம் தான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது என்று சொல்கிறார்.

    பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை விளக்க செயலாளராக ஆளுனர் இருக்கக்கூடாது.

    இவ்வாறு பேசினார்.

    திருமாவளவன் பேசியதாவது, திமுக, திராவிடர் கழகம் திராவிட தேசியம் பேசவில்லை.

    திராவிட அரசியலை பேசுகிறது. திராவிட அரசியல் என்பது ஆரிய எதிர்ப்பு அரசியல். பிஜேபியையும், ஆர்எஸ்எஸ் யையும் எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என பேசினார்.

    திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசுகையில் கூறியதாவது, நாங்கள் கொள்கையில் எரிமலை.

    உங்களுக்கு கிடைத்திருக்கிற அந்த பதவியே திராவிட இயக்கத்தின் எதிரொலியால் கிடைத்திருக்கிற பதவி மறந்து விடாதீர்கள். ஏன் அந்த இடத்தில் எச்.ராஜா, சேகர், கணேஷய்யர் இல்லை.

    அண்ணாமலை எப்படி தேர்வானார்.

    தகுதிக்காகவா, இல்லை. பெரியாருக்கு, திராவிடர் கழகத்திற்கு, விடுதலை சிறுத்தைகளுக்கு பயந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு பேசினார்.

    Next Story
    ×