என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
'நம்ம ஸ்கூல்- நம்ம ஊரு பள்ளி' திட்டத்திற்கு நிதி வழங்குங்கள்- கலெக்டர் வேண்டுகோள்
- நன்கொடையாளருக்கு பயனீட்டுச்சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- உட்கட்டமைப்பு வசதிக்கான பொருட்செலவுகளை நன்கொடை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற "நம்ம ஸ்கூல்"- நம்ம ஊரு பள்ளி திட்டம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திட்டப்பணிகளுக்கு நிதி அளிப்பது, பொருட்களாக வழங்குவது, தன்னார்வ சேவைபுரிவது வாயிலாக அரசுபள்ளிகளின் அடிப்படை தேவைகளை சமூக பங்களிப்புடன் நிறைவேற்றிட இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
சமூகபங்களிப்பு நிதியினை பெற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி அன்று "நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி" (nammaschool.tnschools.gov.in) என்ற இணையதளம் மற்றும் தனிவங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
வங்கிக்க ணக்கு அரசு பள்ளி களின் மேம்பாட்டிற்காக பெரு, சிறு, குறு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு அளித்திட உறுதுணையாக உள்ளது.
இணையதளம் வழியாக பெறப்படும் நிதியானது பள்ளிகளுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற இன்றியமையாத தேவைகளுக்கான செலவினம் மேற்கொள்ளப்பட்டு நன்கொடையாளருக்கு பயனீட்டுச்சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டு ள்ளது.
அரசு பள்ளிகளுக்கென தனிநபர்கள், முன்னாள் மாணவர்கள் குறு மற்றும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி போன்றவை இணையதளம் வாயிலாக மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.
இதற்கென ஒவ்வொரு பள்ளிக்கும் வங்கி கணக்கு தொடங்கவும் பள்ளிக் கல்வித்துறையால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் பள்ளியை மேற்குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக தேர்ந்தெடுத்து உட்கட்ட மைப்பு வசதிக்கான பொருட்செலவுகளை நன்கொடை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்கொடையாளருக்கு பயனீட்டுச்சான்றிதழ் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்