என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரிமங்கலத்தில் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
- தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காரிமங்கலம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
- கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி வரவேற்று பேசினார்
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூர், கிழக்கு மத்திய, மேற்கு ஒன்றிய தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காரிமங்கலம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி வரவேற்று பேசினார். கூட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால் அடிலம் அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர்
பி.சி.ஆர். மனோகரன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனி யப்பன் பங்கேற்று பூத் கமிட்டி நிர்வாகிகளின் பணி கள், செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி கண்ண பெருமாள், மாவட்ட இளைஞர் அணி ஹரி பிரசாத், மாவட்ட மாணவ ரணி துணை அமைப்பாளர் பிரபு, ஒன்றிய துணை செயலா ளர்கள் சண்முகம், தங்கதுரை, நகர துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட பிரதி நிதிகள் முத்து செல்வம், ரமேஷ் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் நிர்வாகிகள் வாக்குச்சாவடி முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






