என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தி.மு.க. வளர்சியை கண்டு எதிர் கட்சிகளுக்கு பொறாமைவசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி
- கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
- திகழ்ந்துவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறச்சி:
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய துணைக்கண்டத்தின் சிறப்புமிகு மாநிலமாக தமிழகத்தை தலை நிமிர்த்தி மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் உதாரணமாக திகழ்ந்துவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி சம சீராக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வரும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாகவே தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு ஆகியவை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனை நடுநிலையாளர்களும் ஒத்துக்கொள்வார்கள். அதேசமயம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வரும் ஆதரவு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் காணப்படும் வரவேற்பு குறிப்பாக இளைஞர்களிடையே காணப்படும் எழுச்சி இவற்றைக் கண்டு எதிர்க்கட்சியினர் பொறாமை கொண்டு சேர்க்கை வாரி தூற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரம் தமிழக மக்களிடையே எடுபடவில்லை. மாறாக எள்ளி நகையாடும் அளவிற்கு எதிர்க்கட்சி களின் செயல்பாடு களை விமர்சித்து வருகின்றனர். ஒவ்வொரு துறையிலும் தீட்டப்படும் திட்டமானது மாநிலத்தின் வளர்ச்சி அதன் மூலம் தமிழக மக்களின் பொருளாதார மேம்பாடு என்ற ஒரே நோக்குடன் செயல்படுத்தி வருவதால் இன்னும்2 ஆண்டுகளில் தமிழகம் அபரீத வளர்ச்சி பெறும். அந்த அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மாவட்ட மக்களின் நல வாழ்வு மேம்பாட்டுக்கும் கேட்கும் அனைத்து திட்டங்களையும் மற்றும் நிதி உதவிகளையும் வழங்கி வருவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமித்து வளர்ச்சி பணியை துரிதப்படுத்தி வருகிறார். மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலு தனது சொந்த மாவட்டமான திருவண்ணாமலை விட கள்ளக்குறிச்சி மாவட்ட த்தின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார். கொள்கிறேன்.இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்