search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை
    X

    கிருஷ்ணகிரி தேவராஜா தொழிற்சாலை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை

    • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
    • டி.மதியழகன் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க., தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தி.மு.க.,வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

    கிருஷ்ணகிரி தேவராஜா தொழிற்சாலை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் கிருஷ்ணகிரி டாக்டர் விஜய், பர்கூர் அரியப்பன், ஊத்தங்கரை டாக்டர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர செயலாளர் நவாப், தலைமை செயற்குழு உறுப்பினரும், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவருமான பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், பேரூராட்சி தலைவர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் 16-வது வார்டுக்குட்பட்ட அரசனட்டியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது.,

    மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா, ஓசூர் தொகுதி பொறுப்பாளரும், கொள்கைபரப்பு குழு துணை செயலாளருமான வேலூர் ரமேஷ், மாவட்ட துணைசெயலாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிரீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ், பகுதி செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக, மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். முடிவில், மாநகராட்சி 2-வது மண்டலக்குழு தலைவர் காந்திமதி கண்ணன் நன்றி கூறினார்.

    நல்லம்பள்ளி

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தி.மு.க. மத்திய ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தருமபுரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

    தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் ஏ.கே தருண் முன்னிலை வகித்தார். நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய செயலாளர் மல்லமுத்து ஏற்பாட்டில் இந்த கூட்டம் நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் திறளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×