என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நினைவு நாளில் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு உணவு வழங்கிய திமுக நிர்வாகிகள்
    X

    கருணாநிதி நினைவு நாளில் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு உணவு வழங்கிய திமுக நிர்வாகிகள்

    • சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழுதிகை நா.செல்வசேகரன், குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்.
    • வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 142 கிளை கழகங்களிலும் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    பொன்னேரி:

    தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சோழவரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பாக பண்டிக்காவனூர் ஊராட்சியில் உள்ள ஆனந்த இல்லம் என்ற காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்து. சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழுதிகை நா.செல்வசேகரன், குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தச்சூர் ரவி , பண்டிக்காவனூர் ராமமூர்த்தி மற்றும் அண்ணா நகர் கிளை சுதாகர் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிரவன் , ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் ராஜேஷ், ஞாயிறு சுதாகர், ஒன்றிய சமுக வளைதள பொறுப்பாளர் மாளிவாக்கம் மகேஷ் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சோழவரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 142 கிளை கழகங்களிலும் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×