search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    X

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.

    சங்கரன்கோவிலில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் பட்டாசு வெடித்தும், படம் பார்க்க வந்தவர்களுக்கு டிக்கெட் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    சங்கரன்கோவில்:

    தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்நிலையில் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டரில் படம் திரையிடப்பட்டது.இந் நிலையில் படம் வெளியானதை தொடர்ந்து அதை வரவேற்கும் வகையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் பட்டாசு வெடித்தும், படம் பார்க்க வந்தவர்களுக்கு டிக்கெட் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    இதில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, மேலநீலித நல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, நகர துணை செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட இளைஞர் அணி சரவணன், மாணவரணி அப்பாஸ்அலி, நகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார், செல்வராஜ், தொண்டரணி காளிசாமி, ராமர், மகளிர் அணி செல்வராணி, வக்கீல் சதீஷ், வீரிருப்பு கிளை செயலாளர் முருகராஜ், ஜெயக்குமார், ரகுமான், பிரகாஷ், வைரவேல், திரையரங்கு மேலாளர் திருப்பதி ராஜா, முத்துநடராஜன், வன்னிக்கோனேந்தல் ஆறுமுகபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×