search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிருக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி
    X

    மகளிருக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

    • வருகிற 23-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
    • கபடி, ஜூடோ மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வருகிற 23-ந் தேதி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், மகளிருக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 23-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    அதன்படி, தடகள விளையாட்டில் 100, 200, 400 மீட்டர், ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகளும், இறகுபந்து விளையாட்டில் இரட்டையர் பிரிவு போட்டிகளும், கபடி, ஜூடோ மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கப்படுகிறது.

    போட்டிகளில் அனைத்து வயது பிரிவு மகளிரும் கலந்துகொள்ளலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகளிர், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பயனடையலாம் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×