search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி - முள்ளன்விளை அணி முதலிடம்
    X

    மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி - முள்ளன்விளை அணி முதலிடம்

    • முள்ளன்விளையில் நண்பர்கள் குழு சார்பில் மாவட்ட அளவிலான 24-வது மின்னொளி கபடி போட்டி நடந்தது.
    • விளையாட்டு போட்டிக்கு பிரபாகர், ராஜேஷ், ஜெயசந்திரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள முள்ளன்விளையில் நண்பர்கள் குழு சார்பில் மாவட்ட அளவிலான 24-வது மின்னொளி கபடி போட்டி நடந்தது. விழாக்குழு தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். கருப்பசாமி கோவில் தர்மகர்த்தா பாலமோகன் முன்னிலை வகித்தார்.

    இதில் 86 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் முதலிடம் பெற்ற முள்ளன்விளை வெண்ணிலா அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இதேபோல் 2-வது இடம் பெற்ற வேம்பார் கடல்புறா அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3-ம் இடம்பெற்ற கூட்டாம்புளி கணேசா அணிக்கு ரூ.15 ஆயிரமும், 4-வது இடம் பெற்ற முத்தையாபுரம் நேசம்மாள் அணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிக்கு பிரபாகர், ராஜேஷ், ஜெயசந்திரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இவ்விழாவில் முள்ளன்வி ளை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×