என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் சித்தனூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்
    X

    மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை படத்தில் காணலாம்.

    சேலம் சித்தனூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்

    • தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.
    • இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமை–களை வெளிப்படுத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் சேலம் சித்தனூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமை–களை வெளிப்படுத்தினர்.

    இதில் மாணவிகள் பிரிவில் 9 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மேகவர்ஷினி, மித்ராஸ்ரீ ஆகியோர் முதல் 2 இடங்க–ளையும், மாணவர்கள் பிரிவில் சிவப்பிரசன்னா, சுகந்த் ஆகியோர் முதல் 2 இடங்களையும் பிடித்தனர். அதேபோல் 11 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவிகளில் சண்மிதா, பிரதிக்ஷா ஆகியோரும் மாணவர்களில் கவின் சஞ்சய் ஆகியோரும் முதல் இரு இடங்களை பிடித்தனர்.

    17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவிகளில் பிரியதர்ஷினி, கிருத்திகா ஆகியோரும் மாணவர்கள் பிரிவில் பிரகதீஷ் ஸ்ரீராம், விஷ்வா ஆகியோரும் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு சேலம் மாவட்ட சதுரங்கக் கழகத்தின் செயலாளர் அருண் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் தனபால், பால நரசிம்மன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்த–னர். இந்த போட்டியில் நடுவர்களாக தேசிய அளவிலான மூத்த நடுவர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

    Next Story
    ×